உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு விழா 23ல் துவக்கம்

 காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு விழா 23ல் துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதத்தில் நடைபெறும், கடை ஞாயிறு விழா, வரும் 23ம் தேதி துவங்குகிறது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், வாரந்தோறும் பக்தர்கள் மாவிளக்கு எடுக்கும் கடை ஞாயிறு பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதில், சிறுவர்கள், பெரியவர்கள் என, ஆயிரக் கணக்கான பக்தர்கள் மண்சட்டியில், பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து, அதில் அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி, தலையில் மாவிளக்கு சுமந்தபடி பக்தி பரவசத்துடன் கோவில் பிரகாரத்தை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவர். அதன்படி, கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நவ., 23ம் தேதி முதல், வார கார்த்திகை, கடை ஞாயிறு விழா துவங்குகிறது. தொடர்ந்து இரண்டாவது வாரம் நவ., 30, மூன்றாவது வாரம் டிச., 7, நான்காவது வார கடை ஞாயிறு விழா டிச., 14ல் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் திவ்யா, பணியாளர்கள், அர்ச்சகர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி