உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீடு வாங்கி தருவதாக மோசடி மணலிபுதுநகர் பெண் கைது

வீடு வாங்கி தருவதாக மோசடி மணலிபுதுநகர் பெண் கைது

ஆவடி:ராமாபுரம், பூத்தப்பேடு, அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கவுதமன், 35. இவர், ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் பண மோசடி குறித்து புகார் அளித்தார்.அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது:சென்னை, ராமாபுரம், நாயுடு தெருவைச் சேர்ந்த சுப்ரமணியன், குமணன்சாவடியைச் சேர்ந்த செல்வம், அம்பத்துாரைச் சேர்ந்த நித்யா, லட்சுமி ஆகியோர், குடிசை மாற்று வாரிய வீடுகளை வாங்கி கொடுப்பதாக ஆசை காட்டினர்.அதற்கு முன்பணமாக, 85,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றனர். அவர்களை நம்பி, 104 பேர், 88.40 லட்சம் ரூபாய் கொடுத்தோம். அதன்பின், படப்பை அருகே, பணப்பாக்கம்கிராமத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை அடையாளம் காட்டினர். அங்கு வீடுகள் ஒதுக்கப்பட்டதாக கூறி, 'போலி' ஆவணங்களை கொடுத்து ஏமாற்றினர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.இது குறித்து விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண தடுப்பு பிரிவு போலீசார், மணலிபுதுநகர், 54வது தெருவைச் சேர்ந்த லட்சுமி, 43, என்பவரை நேற்று கைது செய்தனர்.தலைமறைவான மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ