மேலும் செய்திகள்
வில்வித்தை போட்டியில் வென்ற காஞ்சி மாணவ -- மாணவியர்
16 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ராஜகுளம் கிராமத்தில், மாசி மாத பவுர்ணமி தினத்தன்று, வரதர் தெப்போற்சவம் நடைபெறும்.நடப்பாண்டு, பிப்.,24ம் தேதி அன்று, அதிகாலை 4:00 மணிக்கு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் புறப்பட்டு, வையாவூர், கவுரியம்மன் பேட்டை, சிட்டியம்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு சென்ற பின், ராஜகுளம் கிராமத்தைச் சென்றடைவார்.அங்குள்ள உற்சவ மண்டபத்தில், பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு வரதராஜ பெருமாள் ராஜகுளம் தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை மூன்று முறை வலம் வருவார்.
16 hour(s) ago