உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பேனா கேமராவால் ஆபாச வீடியோ ராயபுரம் மருத்துவ மாணவர் கைது

பேனா கேமராவால் ஆபாச வீடியோ ராயபுரம் மருத்துவ மாணவர் கைது

சென்னை:சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்தவர் இப்ராஹிம், 36. இவர், பிரபல தனியார் மருத்துவக் கல்லுாரியில், முதுகலை பல் மருத்துவம் படித்து வருகிறார்.இவரது வீட்டின் 2வது தளத்தில், கடந்த 10 ஆண்டுகளாக 30 வயது பெண் வசித்து வருகிறார். இவர், நேற்று ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:என் வீட்டின் படுக்கை அறையில், நேற்று முன்தினம் புதிதாக பேனா ஒன்று இருந்தது. அதை பரிசோதனை செய்தபோது அந்த பேனாவில், கேமரா இருந்ததை கண்டறிந்தேன்.இது குறித்து என் கணவருக்கு தகவல் தெரிவித்ததும், அவர், நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்து பேனாவில் உள்ள கேமராவை பரிசோதனை செய்தார்.அதில் உடை மாற்றுவது உள்ளிட்ட வீடியோக்கள் பதிவாகி இருந்தன. இந்த சம்பவத்தை மேற்கொண்டவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.இது குறித்து ராயபுரம் போலீசார் விசாரித்தனர். இதில், பெண்ணின் வீட்டின் அதே 2வது தளத்தில் வசிக்கும், வீட்டின் உரிமையாளரின் மகன் இப்ராஹிம் என்பவர், படுக்கை அறையில் பேனா கேமரா வைத்து வீடியோக்கள் எடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை