| ADDED : நவ 18, 2025 04:20 AM
ஸ்ரீபெரும்புதுார்: வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில், காரணித்தாங்கலில் உள்ள கட்டடங்களின் மீது வைக்கப்பட்டுள்ள ராட்சத விளம்பர பேனர், காற்றில் கிழிந்து தொங்கிக் கொண்டு இருக்கிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். வண்டலுார் - வாலாஜாபாத் சாலையை பயன்படுத்தி, ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, ஸ்ரீபெரும்புதுார் - - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையோரம், ஒரகடம், வல்லக்கோட்டை, செரப்பனஞ்சேரி, காரணித்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில், சாலையோரம் உள்ள கட்டடங்களின் மீதும், அருகே உள்ள இடங்களிலும் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் கவன சிதறல் ஏற்பட்டு அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும், பலத்த காற்று அடிக்கும் போது கட்டடங்களில் உள்ள இந்த பேனர்கள் சாலையில் விழுவதால் விபத்தும் ஏற்படுகிறது. இந்த நிலையில், ஒரகடம் அருகே, காரணித்தாங்கல் பகுதியில், சாலையோரம் உள்ள கட்டடத்தின் மீது வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர் காற்றில் கிழிந்து அந்தரத்தில் தொங்குகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.