| ADDED : பிப் 04, 2024 06:05 AM
சென்னை : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை சார்பில், தென்மாநில அளவில் பல்கலைகளுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலையில், கடந்த மூன்று நாட்கள் நடந்தன.தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உட்பட பல மாநிலங்களின், 70 பல்கலையில் இருந்து, 400க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகள், 'நாக் அவுட்' மற்றும் 'லீக்' முறையில் நடந்தன.அனைத்து போட்டிகளின் முடிவில், சென்னை பல்கலை அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.தொடர்ந்து, பெங்களூரு ஜி.ஐ.டி.ஏ.எம்., பல்கலை, சென்னை எஸ்.ஆர்.எம்., வேல்ஸ் பல்கலை அணி, அடுத்தடுத்த இடங்களை வென்றன.போட்டியில் முதல் நான்கு இடங்களை வென்ற மேற்கண்ட அணிகள், அடுத்த மாதம் டில்லியில் நடக்கும் அகில இந்திய போட்டியில் பங்கேற்க உள்ளன.போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, அம்பேத்கர் பல்கலையின் துணைவேந்தர் கேனல் என்.எஸ்.சந்தோஷ் குமார், விளையாட்டு பல்கலையின் துணைவேந்தர் சுந்தர் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.