உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாடுகளை வீட்டில் கட்டி வைக்காமல் சாலையில் திரிய விடும் உரிமையாளர்கள்

மாடுகளை வீட்டில் கட்டி வைக்காமல் சாலையில் திரிய விடும் உரிமையாளர்கள்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் கால்நடை பராமரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கால்நடை பராமரிப்போரில் பலர், கால்நடைகளை இரவு, பகல் பாராது நெடுஞ்சாலையில் விட்டு விடுகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வாலாஜாபாத் பஜார் வீதி மற்றும் வாலாஜாபாதில் இருந்து, ஒரகடம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கான சாலைகளில், நாள் முழுக்க மக்கள் நடமாட்டம் இருந்த வண்ணம் உள்ளது. இப்பகுதி சாலைகளில் எப்போதும் கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் தினசரி அவதிபடுகின்றனர்.இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் மாலா கூறியதாவது:சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். அவ்வப்போது கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்கிறோம்.சாலைகளில் திரியும் கால்நடைகள் பிடிப்பதை, இனி வரும் நாட்களில் தீவிரபடுத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி