மேலும் செய்திகள்
காமாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
03-May-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பல்லவர்மேடு, தீப்பாஞ்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 13வது ஆண்டு கத்திரி திருவிழா மற்றும் தீமிதி திருவிழா, நாளை மறுதினம் நடைபெறுகிறது.விழாவையொட்டி இன்று, காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமமும், தொடர்ந்து பந்தகால் விழாவும், காலை 10:00 மணிக்கு தீமிதிக்கும் பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்வு நடக்கிறது.நாளை மறுநாள், காலை 7:00 மணிக்கு, அம்மனுக்கு தாய் வீட்டு சீர் கொண்டு வரும் நிகழ்வும், காலை 9:00 மணிக்கு அம்மன் கரகம் புறப்பாடும் நடைபெறுகிறது.மதியம் 12:00 மணிக்கு படையலிட்டு அம்மன் வர்ணிப்பும், மாலை 6:00 மணிக்கு தாயார் குளம் சென்று நீர் கொண்டு வரும் நிகழ்வும் நடக்கிறது.இரவு 7:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு, தீப்பாஞ்சியம்மன் ஊர்வலம் நடக்கிறது.
03-May-2025