மேலும் செய்திகள்
கல் குவாரியில் விதிமீறல் கவுன்சிலருக்கு கம்பி
19-Dec-2025
சிறைகளில் போலீசாரை தாக்கிய கைதி மீது வழக்கு
18-Dec-2025
தாயை தாக்கிய தம்பியை கொலை செய்தவர் கைது
11-Dec-2025
நாகர்கோவில் : கன்னியாகுமரியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடல் நீர்மட்டம் குறைந்ததை தொடர்ந்து படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் போக்குவரத்து கழகம் படகுகளில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்கிறது. வழக்கமாக காலை 8:00 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி மாலை 4:00 மணி வரை தொடர்ந்து நடைபெறும் .இரண்டு நாட்களாக கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. காலை நேரத்தில் கடல் நீர் குறைந்து பாறைகள் வெளியே தெரிகிறது. காலை 10:00 மணிக்கு பின்னர் நீர்மட்டம் சிறிது சிறிதாக உயர்ந்து படகு இயக்கும் அளவுக்கு நிலைமை சீராகிறது.இதனால் நேற்றும் நேற்று முன்தினமும் காலை 8:00 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து 10:00 மணிக்கு பின்னர் தொடங்கியது. அதிகாலை முதலே இதற்காக வரிசையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.பொதுவாக அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கடலில் ஏற்படும் இயல்பான மாற்றம் தான் என்று இங்குள்ள வியாபாரிகள் கூறுகின்றனர்.
19-Dec-2025
18-Dec-2025
11-Dec-2025