உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலிகுளித்தலை, : குளித்தலை அடுத்த, பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்., வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார், 39, இவரது தந்தை ராஜி, 59, கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் டி.வி.எஸ்., ஜூபிடர் பைக்கில் பழைய ஜெயங்கொண்டம்-பஞ்சப்பட்டி நெடுஞ்சாலையில் சென்ற போது, நிலைதடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பணியில் இருந்த மருத்துவர் பரிசோதித்த போது, ராஜி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.இது குறித்து அவரது மகன் தினேஷ்குமார் கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை