உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் குழு கூட்டம்

முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் குழு கூட்டம்

குளித்தலை : குளித்தலையில், தமிழ்நாடு மாநில பணி நிறைவு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின், கரூர் மாவட்டம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடை-பெற்றது.மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் மாயவன் வரவேற்றார். செயலாளர் தர்மராஜ், துணைத்தலைவர் மூர்த்தி, இணை செயலாளர் ஜெயமூர்த்தி, துணை செய-லாளர் சடையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் அரசாணை எண். 418ன் கீழ், முழுமையாக பயன் அடையாத உறுப்பினர்-களின் கோரிக்கை மீது, நமது சங்கம் எடுத்த நட-வடிக்கை குறித்து உறுப்பினர்களுக்கு தெரி-வித்தல், உறுப்பினர்களின் நலன் சார்ந்த அனைத்து கோரிக்கைகளின் கீழ், மாவட்ட நிர்-வாகம் மேற்கொண்ட நடவடிக்கை, விழுப்பு-ரத்தில் ஆக.,7 ல் நடைபெறும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி