உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

குளித்தலை:குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன், இடையப்பட்டி பஞ்., சேவாப்பூர் கோட்டக்கரையை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, 48, விவசாயி. இவரது, 17 வயது மகள் கடந்த, 24ல் இரவு வழக்கம் போல் குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு, 10:00 மணிக்கு மேல் துாங்கினார். மறுநாள் பார்த்தபோது, மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.தனது மகளை காணவில்லை என, வெள்ளைச்சாமி கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை