உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரத்தில் பயனாளிகளுக்கு வேலை உத்தரவு வழங்கல்

கிருஷ்ணராயபுரத்தில் பயனாளிகளுக்கு வேலை உத்தரவு வழங்கல்

கிருஷ்ணராயபுரம்;கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலக அலுவலகத்தில், கலைஞர் கனவு இல்லம் மற்றும் கிராமப்புற வீடுகள் பழுது பார்க்கும் திட்ட பயனாளிகளுக்கு, வேலை உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். கலைஞர் கனவு இல்லம் மற்றும் கிராமப்புற வீடுகள் பழுது பார்க்கும் திட்ட பயனாளிளுக்கு, வேலை வழங்கும் உத்தரவு வழங்கப்பட்டது. இதில் கலைஞர் கனவு இல்லம், 36 பயனாளிகளுக்கும், 200 நபர்களுக்கு வீடுகள் பழுது பார்க்கும் உத்தரவு தரப்பட்டது. யூனியன் சேர்மன் சுமித்திராதேவி, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரவிராஜா, கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், யூனியன் பொறியாளர் சிவகுமார், யூனியன் அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ