உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலங்களில் பராமரிப்பு பணி

நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலங்களில் பராமரிப்பு பணி

அரவக்குறிச்சி, பருவ மழை தொடங்க உள்ள நிலையில், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 350 சிறிய, பெரிய பாலங்களில் பராமரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள பாலங்களை பராமரித்து, தடையின்றி தண்ணீர் செல்ல முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் அடிப்படையில், அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள, 350 பெரிய, சிறிய பாலங்களை கரூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரவிக்குமார் உத்தரவின்படி, அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வினோத்குமார் மேற்பார்வையில், பாலங்களில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதில், 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை