கரூர்-கோவை சாலை பிரிவில் செயல்படாத போக்குவரத்து சிக்னல்
கரூர்: கரூர்-ஈரோடு மற்றும் கோவை சாலை பிரிவில் அமைக்கப்பட்ட, போக்குவரத்து சிக்னல் செயல்ப-டாமல் உள்ளது. இதனால், அந்த பகுதியில் போக்-குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகி-றது.கரூர்-கோவை மற்றும் ஈரோடு பிரிவு சாலையில் தனியார், அரசு பள்ளிகள், தனியார் வங்கி தலைமை அலுவலகம், காவலர் குடியி-ருப்பு மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால், கோவை, ஈரோடு சாலை பிரிவு முனியப்பன் கோவில் பகுதியில், போக்கு-வரத்து சீராக செல்ல பல மாதங்களுக்கு முன்பு, சிக்னல் அமைக்கப்பட்டது. தற்போது, அந்த சிக்னல் சேதம் அடைந்து, செயல்படாமல் உள்-ளது. அதை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்-ளாமல் உள்ளனர்.இதனால், அந்த பகுதியில் அடிக்கடி நெரிசல் மற்றும் சிறிய அளவிலான விபத்துக் கள் ஏற்படு-கிறது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர்-கோவை மற்றும் ஈரோடு சாலை பிரிவில், சேதமடைந்துள்ள போக்குவரத்து சிக்-னலை சரி செய்ய, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்-பார்க்கின்றனர்.