உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரங்கநாத சுவாமி கோவிலில் 7ம் நாள் பகல் பத்து உற்சவம்

ரங்கநாத சுவாமி கோவிலில் 7ம் நாள் பகல் பத்து உற்சவம்

கரூர்: கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஏழாம் நாள், பகல் பத்து உற்சவம் நேற்று நடந்தது.கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்துடன் கடந்த, 20 ல் தொடங்கியது. நேற்று ஏழாவது நாள், பகல் பத்து உற்சவம் நடந்தது. அதில், உற்சவர் ரங்கநாத பெருமாள், ரங்கநாயகி தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.வரும், 29ல் மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 30 அதிகாலை, 4:30 மணிக்கு பரமபத சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி