| ADDED : டிச 28, 2025 09:27 AM
கரூர்: கரூர், அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, நேற்று எட்டாம் நாள், பகல் பத்து உற்சவம் நடந்-தது.கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்துடன் கடந்த, 20ல் தொடங்கியது. நேற்று எட்டாம் நாள், பகல் பத்து உற்சவம் நடந்-தது. அதில், உற்சவர் ரங்கநாத பெருமாள், பக்தர்-களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழி-பட்டனர்.வரும், 29ல் மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோலத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்-பாலிப்பார். வரும் 30 அதிகாலை, 4:30 மணிக்கு, பரமபத சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதற்காக, கோவிலில்உள்ள சொர்க்கவாசல் கதவுக்கு, வண்ணம் பூசும் பணிகள் விறுவிறுப்பாக நேற்று நடந்தது.