தேசிய மாணவர் படை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
கரூர், தேசிய மாணவர் படை பயிற்சி பெற்ற, புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது.தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் தனியார் பல்கலை வளாகத்தில், தேசிய மாணவர் படை மாணவ, மாணவியருக்கு, 10 நாட்களாக துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.அதில், கரூர் மாவட்டம், புகழூர் அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, தேசிய மாணவர் படை மாணவர்கள், 50 பேர், பயிற்சி பெற்று சான்றிதழுடன் திரும்பினர். அவர்களுக்கு, தலைமையாசிரியர் விஜயன் தலைமையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. என்.என்.எஸ்., திட்ட அலுவலர் சரவணன், என்.சி.சி., அலுவலர் பொன்னுசாமி, உயர்கல்வி ஆசிரி யர் குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.