உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் ஐ.டி.ஐ.,யில் வரும் 31 வரை விண்ணப்பிக்க கால அவகாசம்

கரூர் ஐ.டி.ஐ.,யில் வரும் 31 வரை விண்ணப்பிக்க கால அவகாசம்

கரூர், கரூர் ஐ.டி.ஐ.,யில் வரும், 31 வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி சேர்க்கை நடந்து வருகிறது. மகளிருக்கு மட்டும் தையல் தொழில்நுட்ப பயிற்சி, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றியிருக்க வேண்டும். மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் படிப்பு, ஓராண்டு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதந்தோறும் உதவித்தொகை, இலவச பஸ் கட்டண சலுகை, சைக்கிள், வரைபடக்கருவிகள், பாட புத்தகங்கள், சீருடை, காலணி ஆகியவை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் 31 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரின் தொலைபேசி எண்களில், 4324- 222111, 9499055711, 9499055712 அல்லது நேரில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !