உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகழூர் டி.என்.பி.எல்., சார்பில் ரூ.32 லட்சம் நிதி உதவி வழங்கல்

புகழூர் டி.என்.பி.எல்., சார்பில் ரூ.32 லட்சம் நிதி உதவி வழங்கல்

கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், சமூக மேம்பாட்டு திட்-டத்தின் கீழ், உயர்மின் கோபுர விளக்குகள் அமைப்பதற்காக நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், முதன்மை பொது மேலாளர்(மனிதவளம்) கலைச்செல்வன் தலைமை வகித்தார்.இந்த நிறுவனத்தில் சமூக மேம்பாட்டு திட்-டத்தின் கீழ் காகித ஆலையை சுற்றி அமைந்-துள்ள புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., திருக்காடுதுறை, வேட்டமங்கலம், புன்னம், கோம்புபாளையம், நஞ்சை புகளூர் ஆகிய பஞ்., பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்கும், உட்கட்டமைப்பினை மேம்படுத்திடவும், பல்-வேறு உதவிகளை செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, கரூர் சட்டசபை தொகுதிக்-குட்பட்ட பகுதிகளில், 50 உயர் மின் கோபுர விளக்-குகள் அமைப்பதற்காக, 32 லட்சம் ரூபாய் காசோலையை புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., தலைவர் ரூபா வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை