உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ

கரூர், கரூர் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில், நேற்று தீ விபத்து ஏற்பட்டது.கரூர் ஐந்து ரோட்டில் இருந்து, வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனி அருகில், மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும் குப்பைகளை சேகரித்து இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக கிடங்கில் குப்பை கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது.இந்நிலையில், நேற்று குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உடனடியாக குப்பை கிடங்கிற்கு சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொக்லைன் இயந்திரம் மூலம், பல்வேறு குப்பைகளை கிளறி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தின்போது, கரூர்- வாங்கல் சாலை புகைமூட்டமாக காட்சி அளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !