உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை தீவிரம்

மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை தீவிரம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இங்கு சேமிக்கப்படும் நீரில், மீன்கள் வளர்க்கப்படுகிறது. கதவணையில் வளர்க்கப்படும் மீன்-களை, உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று பிடித்து, கதவணை அருகில் செல்லும் கட்டளை வாய்க்கால் கரையில் விற்பனை செய்கின்றனர். நேற்று முன்தினம் ஒரு கிலோ ஜிலேபி மீன், 140 ரூபாய், கெண்டை மீன் கிலோ, 100 ரூபாய், விரால் மீன் கிலோ, 650 ரூபாய்க்கு விற்பனையானது. கரூர், குளித்தலை, திருக்காம்பு-லியூர், சேங்கல், பஞ்சப்பட்டி பகுதி மக்கள் மீன்களை வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை