குளித்தலை கல்லுாரி மாணவருக்கு மாரத்தான் ஓட்டத்தில் வெண்கலம்
குளித்தலை, பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட, அனைத்து கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பல்வேறு தடகள போட்டிகளில் கலந்து கொண்டனர். மாரத்தான் ஓட்டத்தில், குளித்தலை அரசு கலைக் கல்லுாரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் சம்பத், மூன்றாவது இடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றார். கல்லுாரி முதல்வர் சுஜாதா, மின்னணுவியல் துறை தலைவர் அன்பரசு, வணிகவியல் துறை தலைவர் பெரியசாமி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.