உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை நகராட்சி அவசர கூட்டம்

குளித்தலை நகராட்சி அவசர கூட்டம்

குளித்தலை: குளித்தலை நகராட்சி அவசர கூட்டம் தலைவர் சகுந்தலா தலைமையில் நடந்தது. நகராட்சி துணைத் தலைவர் கணேசன், ஆணையர் நந்த-குமார், பொறியாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:தி.மு.க., கவுன்சிலர் சாந்தி அண்ணாதுரை: கடந்த மூன்று ஆண்டுகளாக, எனது வார்டில் எந்தவித வளர்ச்சி பணியும் மேற்கொள்ளாததால். தி.மு.க., அரசின் மீது கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.நகராட்சி தலைவர் சகுந்தலா: இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. அனைத்து பணிகளும் நடை-பெறும்.தி.மு.க., கவுன்சிலர் சக்திவேல்: தனது வார்டில் பொது சுகாதார வளாகம், கழிவுநீர் வடிகால், சிறுவர் பூங்கா, ஆண்கள் உடற் பயிற்சி கூடம் அமைக்க டெண்டர் விடப்பட்டும், பணிகள் தொடங்கவில்லை.நகராட்சி தலைவர்: அதிகாரிகள் அடிக்கடி இட-மாற்றம் செய்யப்படுவதால் பணி தொய்வு ஏற்ப-டுகிறது. இனிமேல் பணி தொடர்ந்து நடைபெறும்.தி.மு.க., கவுன்சிலர்கள் சந்துரு. பொன்னர்: குடி-யிருப்பு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை அமைக்க கூடாது.நகராட்சி தலைவர்: மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.பழைய அலுவலக கட்டடத்தை இடித்து அப்புறப்-படுத்துதல், நகராட்சியில் புதிய அலுவலகம் கட்-டுவது உள்பட மூன்று தீர்மானங்களுக்கு தி.மு.க., கவுன்சிலர் சகிலா பானு எதிர்ப்பு தெரிவித்தார்.நகராட்சி அவசர கூட்டத்தில், நான்கு தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ