உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நாய்களை கட்டுப்படுத்த கோரி குறைதீர் கூட்டத்தில் மனு

நாய்களை கட்டுப்படுத்த கோரி குறைதீர் கூட்டத்தில் மனு

கரூர்: நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, மக்கள் அதிகாரம் சார்பில், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அதில், கூறியிருப்பதாவது: கரூர் தான்தோன்றிமலை ஜீவா நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, தெரு நாய்களில் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. ரேஷன் கடை அருகில், 20க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகின்றன. இப்பகுதியில் மக்கள் நடமாடவே அச்சப்படுகின்றனர். குழந்-தைகள் செல்லும் போது நாய்கள் விரட்டி கடிக்கிறது. இரண்டு சக்-கர வாகனத்தில் செல்பவர்களை விரட்டுவதால் விபத்தில் சிக்கு-கின்றனர். வீட்டு வளர்ப்பு பிராணிகளை கடித்து கொன்று விடுகி-றது. எனவே நாய்களை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி