உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் நாளை சிறப்பு கல்வி கடன் முகாம்

கரூரில் நாளை சிறப்பு கல்வி கடன் முகாம்

கரூர், சிறப்பு கல்வி கடன் முகாம் நாளை நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் அருகே தளவாபாளையம் எம்.குமராசாமி பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நாளை (26ம் தேதி) சிறப்பு கல்வி கடன் முகாம் காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. கல்வி கடன் விண்ணப்பிப்பதில் சந்தேகங்கள் ஏற்பட்டால் முகாம் அலுவலர்கள் மூலம் உடன் நிவர்த்தி செய்யப்படும்.மாணவர்கள் பான் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், 10, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், கல்லுாரி கல்வி கட்டண பட்டியல், புகைப்படம், கல்லுாரியில் சேர்ந்ததற்கான ஆதாரம் முதலான ஆவணங்களுடன் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி