உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் வாலிபர் பரிதாப பலி

கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் வாலிபர் பரிதாப பலி

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி ஷா நகரை சேர்ந்தவர் கார்த்திக், 38. இவர் நேற்று பங்காருபாடி சொக்கலாபுரம் சாலையில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் வேகமாக சென்றதால், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் கார்த்திக் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கார்த்திக் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.கார்த்திக் மனைவி தேவி அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ