உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம்

மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம்

கரூர்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.,) கரூர் வட்டக்கிளை சார்பில், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், கிளை தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். வேலைப்பளு ஒப்பந்தத்துக்கு எதிராக வெளியிட்டுள்ள உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும். மின் வாரியத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். கேங்க்மேன்களுக்கு ஊர் மாற்றமும், கள உதவியாளர்களுக்கு பணி மாற்றமும் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில், மாவட்ட சி.ஐ.டி.யு., தலைவர் ஜீவானந்தம், செயலாளர் முருகேசன், மின்வாரிய சங்க நிர்வாகிகள் தனபால், கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை