பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
கரூர்: 'பெரியார் விருது' பெற, வரும், 18க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் சமூக நீதிக்காக பாடுபடுபவர்ளுக்கு, 'பெரியார் விருது' வழங்கப்படுகிறது. இதில், 5 லட்சம் ரூபாய் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட பணி செய்தவர்கள் விண்-ணப்பிக்கலாம். தங்களது விண்ணப்பம், சுயவி-பரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விபரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். வரும், 18க்குள் விண்ணப்-பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.