உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 300 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது

300 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது

கிருஷ்ணகிரி : காவேரிப்பட்டணத்தில், அகரம் சாலையிலுள்ள ஒரு குடோனில், குட்கா பதுக்கி உள்ளதாக தகவலின் படி, காவேரிப்பட்டணம் எஸ்.ஐ., மோகன்ராஜ், ஏட்டு சரவணன் ஆகியோர் நேற்று அங்கு சோதனை செய்தனர். அதில், 300 கிலோ எடையுள்ள, 1.70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். குடோனின் உரிமையாளரான கோவிந்தசெட்டி தெருவை சேர்ந்த மகேந்திரகுமார் சிங், 28, என்பவரை கைது செய்து, குடோனுக்கு, 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி