உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒற்றை யானை தாக்கி வனக்காவலர் படுகாயம்

ஒற்றை யானை தாக்கி வனக்காவலர் படுகாயம்

ஓசூர்: ஓசூர் வனப்பகுதிக்கு உட்பட்ட, சூளகிரி அடுத்த மேலுமலை வனப்பகுதியில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனப்பகுதியி-லிருந்து வெளியேறிய ஆண் யானை ஒன்று சுற்றித்திரிகிறது.அதை ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு விரட்ட, ராயக்கோட்டை வனச்சரகத்தை சேர்ந்த, 15க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் முயன்று வருகின்றனர். நேற்று காலை சாமல்பள்ளம் அருகில் ஓட்டயனுாரில் சுற்றித்தி-ரிந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனக்காவலர் நரசிம்மன், 50, வனக்காப்பாளர் முருகேசன் ஆகி-யோரை யானை தாக்க முயன்றது. முருகேசன் தப்பிய நிலையில், நரசிம்மனை, யானை காலால் உதைத்து சென்றது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட வனத்துறையினர், கிருஷ்-ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி மற்றும் வனத்துறையினர் விரைந்து, மக்களை அப்பகுதிக்கு வரவேண்டாம் என எச்சரித்தனர். தொடர்ந்து, ஒற்றை யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை