உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியரான முன்னாள் மாணவர்

படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியரான முன்னாள் மாணவர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியதிற்கு உட்பட்ட அஞ்சூர் - ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் செந்தில்குமார் என்-பவர் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார். இவரது சொந்த ஊர் ஜெகதேவி கிராமம். இவர் அப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் மேற்ப-டிப்பை பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று, தேர்வு வாரி-யத்தால் ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டு, தாவரவியல் ஆசிரிய-ராக பல்வேறு பள்ளிகளில் பணிபுரிந்துள்ளார். இவர், தற்போது பதவி உயர்வு பெற்று, தான் படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டுள்ளார். அவரை, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ