உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, காளப்பனஹள்ளி பஞ்., காட்டுக்கொட்டாயில் முனியப்பன் கோவில் கும்பாபி-ஷேகம் கடந்த மாதம் நடந்தது.தொடர்ந்து, மண்டல பூஜை நடந்த நிலையில், நேற்று காலை கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்-பதைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதேபோல், காளப்பனஹள்ளி பஞ்., நிர்வாகத்திற்கு சொந்தமான, ஆழ்துளை கிணற்றில் இணைக்கப்பட்ட, 10,000 ரூபாய் மதிப்புள்ள கேபிள் ஒயர்களும் திருடப்பட்டுள்ளன.அதேபோல், பெரியாம்பட்டி பஞ்., ஆர்.ஐ., அலுவலக வளா-கத்தில் இருந்த குடிநீர் மோட்டார் திருட்டு போனது. இச்சம்ப-வங்கள் குறித்து, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்