உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாயியை அடித்து கொன்று மகளை கடத்திய வாலிபர் கைது

விவசாயியை அடித்து கொன்று மகளை கடத்திய வாலிபர் கைது

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே காமையூரை சேர்ந்தவர் முனிராஜ், 45, விவசாயி. ஜெ.காருப்பள்ளி கூட்ரோடு அருகே ஒருவரது நிலத்தில் தங்கி, விவசாயம் செய்து வந்தார்; இவரின், 17 வயது மகளை, ஜெ.காருப்பள்ளியை சேர்ந்த தொழிலாளி வெங்கட்ராஜ், 24, காதலித்தார். கடந்தாண்டு அக்., 23ல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரில், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்குப்பதிந்து வெங்கட்ராஜை கைது செய்தனர்.கடந்த டிசம்பரில் ஜாமினில் வந்த வெங்கட்ராஜ், சிறுமியிடம் தொடர்ந்து பேசி வந்தார்; இதை முனிராஜ் கண்டித்தார். கடந்த, 3ம் தேதி நள்ளிரவு சிறுமியின் வீட்டுக்கு சென்ற வெங்கட்ராஜ், அவரை கடத்த முயன்றார். இதை தடுத்த தந்தை முனிராஜை, கட்டையால் தாக்கி விட்டு, சிறுமியை கடத்தி சென்றார். தலையில் படுகாயமடைந்த முனிராஜ், அதே இடத்தில் பலியானார். கெலமங்கலம் போலீசார், கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் பகுதியில் பதுங்கியிருந்த வெங்கட்ராஜை, கைது செய்தனர். அவரிடமிருந்து விவசாயி முனிராஜின் மகளை மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி