உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் பரவலாக மழை வெப்ப தாக்கம் குறைவால் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரியில் பரவலாக மழை வெப்ப தாக்கம் குறைவால் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்ததால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வெப்ப அளவு சற்று அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணகிரி, ஓசூர், பாரூர், சூளகிரி, ஊத்தங்கரை உட்-பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்-தது. அதேபோல நேற்று காலை முதல் மாவட்டத்தில் பல இடங்-களில் சாரல் மழை பெய்தது. இதனால் கிருஷ்ணகிரி சுற்று வட்-டாரத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 244 கன அடியாக வந்த நீர்வரத்து, நேற்று காலை, 304 கன அடியாக அதிக-ரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான, 52 அடியில், நீர்-மட்டம், 49.85 அடியாக உள்ளது. அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காகவும், ஊற்று வாய்க்கால்களிலும் வினாடிக்கு, 185 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி