உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வேன்கள் மோதி விபத்து 10 மாணவ, மாணவியர் காயம்

வேன்கள் மோதி விபத்து 10 மாணவ, மாணவியர் காயம்

தேன்கனிக்கோட்டை: தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி இயங்குகிறது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தடிக்கல் சுற்றப்புற பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று காலை மாணவ, மாணவியரை அழைத்து கொண்டு, பள்ளிக்கு வேன் சென்றது. பஞ்சப்பள்ளி அணை அருகே, சாலை வளைவில் திரும்பியபோது, எதிரே வந்த பிக்கப் வாகனமும், வேனும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன. இதில், வேனில் பயணம் செய்த, 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படுகாயமடைந்-தனர். அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், தேன்கனிக்-கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ