உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காரில் கடத்த முயன்ற 229 கிலோ குட்கா பறிமுதல்

காரில் கடத்த முயன்ற 229 கிலோ குட்கா பறிமுதல்

ஓசூர், ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த மாருதி சியாஸ் காரை மடக்கி சோதனையிட்டதில், 229 கிலோ புகையிலை பொருட்கள், 48 கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகள் கடத்த முயன்றது தெரிந்தது. அவற்றின் மதிப்பு, 2.03 லட்சம் ரூபாய். புகையிலை பொருட்களுடன் காரையும் பறிமுதல் செய்த போலீசார், பெங்களூரு சிக்பேட் பகுதியை சேர்ந்த அசோக்குமார், 36 என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை