பஞ்., தலைவருக்கு பாராட்டு
பஞ்., தலைவருக்கு பாராட்டுஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே மஞ்சுகொண்டப்பள்ளி பஞ்., தலைவர் ரத்தினம்மா, துணைத் தலைவர் தேவம்மா மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. கடந்த, 5 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வளர்ச்சி திட்டங்களை மேற்கொண்ட பஞ்., தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு, ஊர்மக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. பஞ்., செயலர் காந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.