உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அழகேஸ்வரா கோவிலுக்கு ரூ.5 லட்சம் நன்கொடை

அழகேஸ்வரா கோவிலுக்கு ரூ.5 லட்சம் நன்கொடை

ஓசூர்: சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராமத்திலுள்ள ஐராவதேஸ்வரா கோவிலில், சிவபெருமான் இரு மூலவர்களாக காட்சி தருகிறார். முதலில் காமாட்சி சமேத ஐராவதேஸ்வரா சுவாமி அடுத்தது அகிலாண்டேஸ்வரி சமேத அழகேஸ்வரா சுவாமி. பழமையான இக்கோவிலில், அத்திமுகம் பஞ்., தலைவரும், சூளகிரி ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு குழு தலைவருமான சுரேஷ் சுவாமி தரிசனம்செய்தார். அப்போது, அழகேஸ்வரா சுவாமி சேவா அறக்கட்டளைக்கு, 5 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கினார். அதை, அறக்கட்டளை தலைவர் மகேஷ்குமார் மற்றும் சிவசங்கர், தீட்சிதர் வேணுகோபால், நாகபூஷனம், முனிராஜ், புருஷோத்தமன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ