உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

ஓசூரில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 35வது வார்டுக்கு உட்பட்ட கேலக்சி லேஅவுட் மற்றும் மத்தம் சாலையிலுள்ள பூங்கா ஆகியவற்றில், மாநகர மேயர் சத்யா ஆய்வு செய்தார். அப்-போது, கழிவுநீர் கால்வாய், சாலை, தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக மேயர் உறுதியளித்தார்.அதேபோல், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, மாநகராட்சியின் மூல-தன மானிய நிதியிலிருந்து, 19.50 கோடி ரூபாய் மதிப்பில் வணிக வளாகம் கட்டும் பணி நடக்கிறது. இப்பணியை, மாநகர மேயர் சத்யா ஆய்வு செய்து, தரமாகவும், விரைவாகவும் பணி-களை முடிக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ