உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சூறாவளியால் வாழைகள் சேதம்

சூறாவளியால் வாழைகள் சேதம்

மேலுார்: மேலுார், சென்னகரம்பட்டி பகுதியில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் இப் பகுதியைச் சேர்ந்த பாண்டி, குமார், மாணிக்கம் உள்பட பல விவசாயிகளின் வாழை மரங்கள் அடியோடு சாயந்தது.விவசாயி பாண்டி கூறியதாவது: கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் செலவு செய்து வாழை விவசாயம் செய்துள்ளேன். வாழை பயிரிட்டு 9 மாதங்களாகிறது. 15 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் மரங்கள் மற்றும் வாழைத் தார்கள் சாய்ந்தன. இதனால் பாதித்த விவசாயிகள் கடனைக் கட்ட முடியாமல் செய்வதறியாது திகைக்கிறோம். வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து கடன்களை தள்ளுபடி செய்வதோடு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை