மேலும் செய்திகள்
மதுரை- சினிமா- 08.10
30 minutes ago
ரேஷன் கடை பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
15 hour(s) ago
மதுரை அருகே எம்.ஜி.ஆர்., சிலை சேதம்
17 hour(s) ago
ரயில் சேவையில் மாற்றம்
19 hour(s) ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்ஸவம் நேற்று சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.திருவிழா நடைபெறும் ஜூன் 20 வரை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் முடிந்து திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் எழுந்தருளி ஊஞ்சலாட்டம் நடைபெறும். ஓதுவாரால் 30 நிமிடங்கள் திருவாசகம் பாடல்கள் பாடப்படும். பின்பு ஆஸ்தான மண்டபத்தை சுவாமி மூன்று முறை வலம் சென்று சேர்த்தி சென்றடைவார்.திருவிழாவின் உச்சநிகழ்ச்சியாக ஜூன் 21ல் உச்சிக்கால பூஜையில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்யகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, உற்ஸவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை முன்பு மா, பலா, வாழை படைக்கப்பட்டு பூஜை நடைபெறும். இரவு சுவாமி தங்கமயில் வாகனத்தில் புறப்பாடாகி ரத வீதிகளில் உலா நிகழ்ச்சி நடைபெறும். திருவிழா நடைபெறும் நாட்களில் தங்கரதம் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
30 minutes ago
15 hour(s) ago
17 hour(s) ago
19 hour(s) ago