உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றத்தில் பட்டாபிஷேகம் இன்று திருக்கல்யாணம்

திருப்பரங்குன்றத்தில் பட்டாபிஷேகம் இன்று திருக்கல்யாணம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. இன்று (மார்ச் 28) மதியம் 12:30 முதல் 12:50 மணிக்குள் சுவாமி- தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.பங்குனி திருவிழா 11ம் நாளான நேற்று மதியம் 3:00 மணிக்கு சுவாமி, தெய்வானை பச்சைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கிரிவீதி, ரத வீதிகளில் பச்சை குதிரை ஓட்டம் நடந்தது. கோயில் காவல் மிராசு கள்ளத்தேவர் வகையறா பங்காளிகள் சார்பில் பச்சை குதிரைக்கு கவாட களி கொடுக்கும் நிகழ்ச்சி முடிந்து சுவாமிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.இரவு 7:00 மணிக்கு கோயில் ஆறுகால் பீடத்தில் சுவாமிக்கு பட்டாபிேஷகம் நடந்தது. சுவாமியின் கரத்தில் நவரத்தின செங்கோல், சேவல், மயில் கொடிகள் சாத்துப்படி செய்து பரிவட்டம் கட்டப்பட்டு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை