உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆதிநாராயணன் மீது வழக்கு

ஆதிநாராயணன் மீது வழக்கு

திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டி ஆதிநாராயணன் 52. மருது சேனை அமைப்பின் தலைவர். 2 நாட்களுக்கு முன் இவர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இவ்வழக்கை உரிய முறையில் விசாரிக்கவில்லை எனக் கூறி அன்று கப்பலுார் டோல்கேட்டை தனது ஆதரவாளர்களோடு முற்றுகையிட்டார். ஆதிநாராயணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள டோல்கேட் தடுப்புகள், சென்சார் கருவிகளை சேதப்படுத்தியதாகவும், ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் திட்ட மேலாளர் மது புகாரில் ஆதிநாராயணன், அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி