உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கேலோ இந்தியா விளையாட்டு ஜன.8 விழிப்புணர்வு மாரத்தான்

கேலோ இந்தியா விளையாட்டு ஜன.8 விழிப்புணர்வு மாரத்தான்

மதுரை: தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டின் கட்கா, கோகோ போட்டி, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஜன.21 முதல் 30 வரை நடக்க உள்ளது.இதையொட்டி ஜன. 8 காலை 6:30 மணிக்கு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் விழிப்புணர்வு மாரத்தான், காலை 7:00 மணிக்கு டூவீலர் விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கிறது. பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனைகள் அன்று காலை 6:00 மணிக்கு ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு வரவேண்டும். மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் அன்று மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கும் விழிப்புணர்வு விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை