உள்ளூர் செய்திகள்

அபாய நிலையம்

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே அதலையில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது.இதனால் இங்கு பணிபுரிபவர்கள், சிகிச்சைக்கு வரும் குழந்தைகள் கர்ப்பிணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அருகே உள்ள செவிலியர் குடியிருப்பு பல ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ளது. சுகாதார நிலையத்திற்குள் மழை நீர் கசிகிறது. சுற்றுச்சுவர் இடிந்து விழுகின்றன. கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பெண்கள் சிரமப்படுகின்றனர். அபாய கட்டடத்தை அகற்றி, புதிதாக கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி