உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கமிஷனர் இல்லாமல் திருமங்கலம் தத்தளிப்பு

கமிஷனர் இல்லாமல் திருமங்கலம் தத்தளிப்பு

திருமங்கலம் : திருமங்கலம் நகராட்சி கமிஷனராக இருந்த டெரன்ட்ஸ் லியோன் மாற்றப்பட்ட பின்பு 2 மாதங்கள் கழித்து நித்தியா என்பவர் கமிஷனராக பொறுப்பேற்றார். சில நாட்களிலேயே பதவி உயர்வு காரணமாக இடமாறிச் சென்றார்.அதன் பின்பு 6 மாதங்களுக்கும் மேலாக கமிஷனர் பணியிடம் காலியாகவே உள்ளது. விருதுநகர் நகராட்சி கமிஷனர் லீமா கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். நகராட்சி அதிகாரிகள் கமிஷனருக்குமே முறையான தகவல் தெரிவிக்காத நிலை இருப்பதால் 2 மாதங்களுக்கு முன்பு நகராட்சி கூட்டம் நடந்தது தனக்கு தெரியாமல் நடந்ததாக தெரிவித்தார்.கமிஷனர் இல்லாததால் நகராட்சி நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது. மதுரை மாநகராட்சிக்கு இரண்டு ஆண்டுகளில் 4 கமிஷனரை நியமித்த அரசு திருமங்கலம் நகராட்சிக்கு உடனடியாக கமிஷனரை நியமிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை