உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / திருச்சி இடிஎல் டூ ஆல் இடிஎல்

திருச்சி இடிஎல் டூ ஆல் இடிஎல்

மயிலாடுதுறை: அகில இந்திய கரும்பு உற்பத்தியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் செயல் தலைவரும், 'தினமலர்' நாளிதழ் திருச்சி பதிப்பு ஆசிரியர், டாக்டர் ஆர்.ராமசுப்புவின் மாமனாருமான எம்பாவை எஸ்.யோகநாதன் நேற்று காலமானார். மயிலாடுதுறை மாவட்டம், மங்கைமடம் ஊராட்சி, எம்பாவை கே.வி.சுப்பிரமணிய அய்யரின் மகன் எஸ்.யோகநாதன், 83. இவரது மனைவி உமாபாலா. இவர்களுக்கு முரளிதரன் என்ற மகனும், நளினி, ரேணுகா, ஜெயஸ்ரீ என்ற மூன்று மகள்களும் உள்ளனர். ரேணுகா, 'தினமலர்' நாளிதழ் திருச்சி பதிப்பு ஆசிரியர், டாக்டர் ஆர்.ராமசுப்புவின் மனைவியாவார். எம்பாவை எஸ்.யோகநாதன், வயது மூப்பு காரணமாக, தான் பிறந்து வளர்ந்த எம்பாவை பூர்வீக வீட்டில், நேற்று காலை 11:40 மணிக்கு காலமானார். இறுதி சடங்கு நாளை மதியம் 2:00 மணியளவில் நடக்கிறது. மறைந்த எம்பாவை எஸ்.யோகநாதன், அகில இந்திய கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயல் தலைவர், என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை (தலைஞாயிறு) கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்து, விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். திருவெண்காடு பிராமணர் சங்கத் தலைவராக பல ஆண்டுகள் இருந்து, பலரது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிகாட்டியவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை