உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / ரூ.1.50 கோடி கோவில் நிலம் அதிரடி மீட்பு

ரூ.1.50 கோடி கோவில் நிலம் அதிரடி மீட்பு

நாகப்பட்டினம்:நாகை அடுத்த புத்துாரில், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு உட்பட்ட சொக்கலிங்கம் பிள்ளை அன்ன சத்திரம் உள்ளது. இந்த அன்ன சத்திரத்திற்கு சொந்தமான, 1.50 கோடி ரூபாய் சந்தை மதிப்புடைய 44 சென்ட் நிலத்தை தனியார் ஆக்கிரமித்து அனுபவித்து வந்தனர். கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்க கோரி பக்தர்கள் அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் வழிகாட்டல் படி, துணை ஆணையர் ராணி தலைமையிலான அலுவலர்கள், ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை