மேட்டூர்:மேட்டூர் அணை நீர்வரத்து, 45,500 கனஅடியாக இருந்த நிலையில், 35,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு, 10,000 கன-அடி நீர் சேமிக்கப்பட்டது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளின் உபரிநீர் திறப்பு அதிகரிப்பால் கடந்த, 11ம் தேதி நள்ளிரவில் நடப்பாண்டில், இரண்டாவது முறையாக அணை நிரம்பி உபரிநீர், 16 கண் மதகில் திறக்கப்பட்டது. முதல் கட்ட-மாக, 26,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதில், 21,500 கன அடி நீர் டெல்டா பாசனத்துக்கும், 4,500 கனஅடி உபரிநீர், 16 கண் மதகு வழியாகவும் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை அணை நீர்வரத்து வினாடிக்கு, 45,500 கன அடியாக அதிகரித்தது. அதற்கேற்ப, 21,500 கனஅடி நீர் பாசனத்துக்கும், 14,000 கனஅடி நீர் உபரியாகவும் காவிரியில் வெளியேற்றப்பட்டது. மீதி, 10,000 கன அடி நீர் அணையில் சேமிக்கப்பட்டது.இதனால் நேற்று முன்தினம் முழு கொள்ளளவான, 120 அடியில் இருந்த அணை நீர்மட்டம், நேற்று காலை, 120.41 அடியாக உயர்ந்தது. அதேபோல் மொத்த நீர் இருப்பான, 93.47 டி.எம்.சி.,யாக இருந்த நிலையில், நேற்று காலை, 94.12 டி.எம்.சி.,யாக அதிகரித்தது.நீர் திறப்பு குறைப்புநேற்று முன்தினம் கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைக-ளுக்கு, 25,842 கனஅடி நீர் வந்தது. அதேநேரம் இரு அணை-களில் இருந்து, 43,318 கனஅடி உபரிநீர் காவிரியில் வெளியேற்-றப்பட்டது. நேற்று மழை தீவிரம் குறைய, அந்த அணைகளுக்கு, 19,716 கனஅடி நீர் வந்த நிலையில், 20,251 கனஅடி நீர் வெளி-யேற்றப்பட்டது.